science-deep-dives

VV-024T: விதை நுண்ணுயிர்கள் (Seed Microbiome)

ரவிசங்கர் கருப்பையா
June 29, 2026

விதை நுண்ணுயிர்கள்

VV-024T: விதை நுண்ணுயிர்கள் (Seed Microbiome)

VV-024T: விதை நுண்ணுயிர்கள் (Seed Microbiome)

கடந்த பதிவுல, சத்துக்கள் பேலன்ஸ் இல்லாத ஒரு கம்போஸ்ட் எப்படி உங்க நிலத்துல சத்துக்களை லாக் பண்ணி, தேவையில்லாத களைகளை முளைக்க வைக்குதுன்னு பார்த்தோம். ஆனா இன்னைக்கு, மண்ணுல இருக்குற நுண்ணுயிர்கள் தங்களுக்குள்ள எப்படிப் பேசிக்கிடுதுன்னு பார்க்குறதுக்கு முன்னாடி... அந்த உயிரியல் எஞ்சின் முதல் முதலா எங்கிருந்து ஆரம்பிக்குதுன்னு பார்க்கணும். நாம விதைகளுக்குள்ள உத்துப் பார்க்கப் போறோம்.

பெரும்பாலான விவசாயிகள் விதையை எப்படிப் பார்க்குறாங்கனா... அது வெறும் செடியோட டி.என்.ஏ-வையும், கொஞ்சம் மாவுச்சத்தையும் கொண்ட ஒரு உயிரற்ற பொருள்னு நினைக்கிறாங்க. அதனாலதான் அதை மண்ணுல இருக்குற நோய்கள்ல இருந்து "பாதுகாக்க" பிங்க் கலர்லயோ இல்ல ப்ளூ கலர்லயோ இருக்குற வீரியமிக்க ரசாயன மருந்துல முக்கி விதைக்கிறோம்.

ஆனா உலகப் புகழ்பெற்ற மண் உயிர்-சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் கிறிஸ்டின் ஜோன்ஸ் (Dr. Christine Jones) என்ன சொல்றாங்கனா... ஒவ்வொரு விதையும் தனக்குள்ள ஒரு பிரம்மாண்டமான உயிருள்ள உலகத்தையே வச்சிருக்கு! அதுக்கு பேர்தான் "விதை நுண்ணுயிர்கள்" (Seed Microbiome). பயிரை வாழ வைக்க இயற்கை குடுத்த இந்த ஆரம்பக்கட்டப் படையை முதல் நாளே நீங்க கெமிக்கல் போட்டு அழிச்சிட்டீங்கன்னா... உங்க பயிர் தன் வாழ்நாள் முழுக்க பிறவிக் குறைபாடுள்ள, பார்வை இல்லாத, ரசாயன மூட்டைகளை மட்டுமே நம்பி வாழும் ஒரு பலவீனமான செடியா மாறிடும்!


1. விதை நுண்ணுயிர்கள் (Seed Microbiome) என்றால் என்ன?

ஒரு தாய் தாவரம் ஒரு விதையை உருவாக்கும்போது, அது வெறும் தன் மரபணுக்களை மட்டும் அந்த விதைக்குக் குடுக்கிறது இல்லை. "எண்டோஃபைட்டுகள்" (Endophytes) எனப்படும் லட்சக்கணக்கான பிரத்யேக நல்ல பாக்டீரியாக்களையும் பூஞ்சைகளையும் அந்த விதைக்குள்ளயும், அதைச் சுத்தியும் பொட்டலம் கட்டி உள்ளே வச்சுதான் அனுப்புது!

இந்த நுண்ணுயிர்கள் அந்தப் பயிரோட முன்னோர்கள் குடுத்த சொத்து. அந்தத் தாய் தாவரம் ஏன் இந்த குறிப்பிட்ட நுண்ணுயிர்களைத் தேர்ந்தெடுத்து விதைக்குள்ள வைக்குதுனா... விதை முளைச்சு வெளிய வர்ற அந்த முதல் நொடியில இந்த வேலைகளை அதுங்க துல்லியமா செய்யும்:

  • புதிய வேர் முனையைச் சுத்தி இருக்குற கடினமான மினரல்களைக் கரைச்சு சத்துக்களைக் குடுக்கும்.
  • பயிரோட இயற்கை நோய் எதிர்ப்புச் சக்தியை (Immune System) ஆன் செய்யும்.
  • மண்ணுல இருக்குற கெட்ட பூஞ்சைகள் அந்தப் பிஞ்சு முளையைத் தாக்காமல் கேடயம் போல் பாதுகாக்கும்.

2. ரைசோஃபேகி சுழற்சி (The Rhizophagy Cycle) — விதையிலிருந்தே ஆரம்பிக்கும் விந்தை!

இங்கதான் அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஜேம்ஸ் வைட்-ன் (Dr. James White) கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த விவசாய உலகையும் வியக்க வச்சிருக்கு: "ரைசோஃபேகி சுழற்சி" என்பது செடி வளர்ந்த பிறகு நடப்பது அல்ல; அது விதை முளைக்கும் போதே, விதையின் மேல் தோலிலிருந்தே நேரடியாக ஆரம்பமாகிவிடுகிறது!

விதை ஈரப்பதத்தை உறிஞ்சி முளைக்கத் தொடங்கும்போது, விதையினுள் இருக்கும் அந்தப் பூர்வகுடி பாக்டீரியாக்கள் உடனடியாக வெளிவந்து அந்த இளவேர் முனையை ஆக்கிரமிக்கும். அங்க இந்தச் சுழற்சி உடனே ஓட ஆரம்பிக்குது:

  1. உறிஞ்சுதல் (Internalization): வளரும் இளம் வேர் முனையானது, விதையில் இருக்கும் அந்த நல்ல பாக்டீரியாக்களை அப்படியே தன் செல்களுக்குள் உறிஞ்சி விழுங்கும்.
  2. சத்து பிரிப்பு (Extraction): வேர் செல்லுக்குள் போன அந்த பாக்டீரியாக்களை செடி தன் ஆக்ஸிஜன் எனர்ஜி (Superoxide) மூலமா அட்டாக் செய்யும். இது அந்த பாக்டீரியாக்களின் வெளிச் சுவர்களைக் கழட்டி, அதுங்க உடம்புல இருக்குற சத்துக்களை நேரடியாக பயிர் உறிஞ்சி எடுத்துக்கொள்ள உதவும்.
  3. வேர் தூவிகள் சுவிட்ச்: சத்துக்கள் உரிக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் வேர் செல்களுக்குள் பல மடங்காகப் பெருகும். இந்த அழுத்தம்தான் வேர்ல இருந்து லட்சக்கணக்கான மெல்லிய வேர் தூவிகள் (Root Hairs) முளைக்கிறதற்கான மெயின் சுிக்னலை குடுக்கும்.
  4. மறுசுழற்சி (Ejection): வேர் தூவிகள் நீண்டு வளரும்போது, செடி தனக்குள்ள வச்சிருக்கற அந்தப் பாக்டீரியாக்களை மீண்டும் வேர் முடிச்சுகள் வழியா மண்ணுக்குள்ளேயே துப்பிடும். அப்படித் துப்பும்போது கூடவே அதுங்களுக்குச் சாப்பாடா கொஞ்சம் திரவச் சர்க்கரையையும் சேர்த்து அனுப்பும்.

இப்போ மண்ணுக்கு வந்த பாக்டீரியாக்கள் அந்தச் சர்க்கரையைச் சாப்பிட்டு, தங்களோட தோலைத் திரும்பப் புதுப்பிச்சு, மண்ணுல இருக்குற மினரல்களைத் திரும்ப எடுத்துக்கிட்டு, பல கோடியா பெருகி... மறுபடியும் நகரும் வேர் முனையால உறிஞ்சப்படும். பயிர் தனக்குச் சோறு போடுற நுண்ணுயிர்களைத் தானே தன் விதையிலிருந்து வேர்களுக்குக் கடத்தி விசித்திரமான ஒரு விவசாயத்தை செய்யுது!


3. ரசாயனச் சதி: வேர்களைப் மொட்டையாக்குதல்!

இப்போ நம்ம ஊர் ரசாயன வயல்கள்ல என்ன நடக்குதுன்னு பாருங்க. இயற்கையால செதுக்கப்பட்ட அந்த உன்னதமான விதையை நாம வாங்கி, வீரியமிக்க ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துல போட்டு பிரட்டுறோம்.

அந்த விஷம் அடுத்த வினாடியே விதையோட தோலைச் சுத்தி இருக்குற அத்தனை இயற்கை நுண்ணுயிர்களையும் கொன்னு குப்பை ஆக்கிடுது. இப்போ அந்த விதை முளைக்கும்போது:

  • எஞ்சின் முடங்கும்: வேர் உறிஞ்சுவதற்கு அங்க பூர்வகுடி நுண்ணுயிர்களே இல்லை; ரைசோஃபேகி சுழற்சி அடியோட உடையுது.
  • மொட்டை வேர்கள்: ஜேம்ஸ் வைட் சொல்ற மாதிரி, நுண்ணுயிர்களின் தூண்டுதல் இல்லாததால் அதுல சத்துக்களை உறிஞ்சுற வேர் தூவிகள் (Root hairs) முளைக்கவே முளைக்காது. வேர்கள் மொட்டையாகவும், பலவீனமாகவும் மாறும்.
  • ரசாயன அடிமைத்தனம்: பயிரால தன் இயற்கை நண்பர்களை வச்சு சத்துக்களை எடுக்க முடியாததால... நீங்க மண்ணுல கொட்டுற தண்ணீரில் கரையும் ரசாயன யூரியாவையும் டி.ஏ.பி-யையும் மட்டுமே நம்பி வாழ ஆரம்பிக்கும். அப்புறம் பயிரோட ப்ரிக்ஸ் அளவு சரிஞ்சு, பூச்சிப் பொறிக்குள்ள பயிர் தானா போய் மாட்டிக்கும்.

நாம மாத்த வேண்டிய விதை உத்தி (The Takeaway)

உங்க பண்ணையை மிகக் குறைந்த செலவுல வளர்க்கணும்னா... முதல்ல இந்த விதையின் இயற்கை ஸ்டார்ட்டர் பேக்-ஐ (Starter Pack) நீங்க பாதுகாக்கணும். ரசாயன விதை நேர்த்தியை இன்னைக்கே நிறுத்துங்க! முறையான விதை நேர்த்தி தான் ஒன்று தான் மிகவும் எளிதாக, விலை குறைவாக, மிக வேகமாக உங்கள் மண் வளத்தை அதிகரிக்கும். நியூ விவா இதற்க்கென்றே ஒரு அறிவியல் பூர்வமான விதை நேர்த்தி திரவத்தை (ViVa Seed Shield) விரைவில் அறிமுகம் செய்ய போகிறது. இதில் உயிரியல் இருக்கிறது. இதில் ஊட்டச்சத்து இருக்கிறது. தெளிவான அணுகுமுறையோடு.

விஷத்துக்குப் பதிலா உயிருள்ள நுண்ணுயிர்களை விதையின் மேல் பூசும்போது... விதை நுண்ணுயிர்கள் பல கோடி மடங்கா பெருகுது. வேர் முனை வெளிய வர்ற அந்த முதல் நொடியிலேயே அது ரைசோஃபேகி எஞ்சினை 100% வேகத்துல ஆன் செய்திடும்.

இங்கதான் கதை இன்னும் சுவாரசியமா மாறுது: வேர் தூவிகள் வழியா இந்த லட்சக்கணக்கான நுண்ணுயிர்கள் ஒன்னா மண்ணுக்குள்ள வெளியேறும்போது... அதுங்க ஏதோ தனித்தனி செல்லா வேலை செய்யாது. அதுங்க மண்ணுக்குள்ள ஒரு பிரம்மாண்டமான கூட்டை உருவாக்கி, தங்களுக்குள்ள ஒரு கூட்டு கம்யூனிகேஷன் சிஸ்டத்தை ஆன் செய்யும். அதுக்கு பேர்தான் கோரம் சென்சிங் (Quorum Sensing).

அடுத்த பதிவுல, இந்த நுண்ணுயிர்களின் ரகசியப் பேச்சுவார்த்தை உங்க மண்ணோட ஆரோக்கியத்தை எப்படி நொடிப் பொழுதுல மாத்தி உங்க பயிருக்கு ஒரு இரும்புக்கவசம் அமைக்குதுன்னு பார்ப்போம்.

இன்னும் பேசுவோம்.

ரவிசங்கர் கருப்பையா New ViVa Bio Nutrients www.newviva.in 934 204 9144

Share this article

Help others discover this content

Share on social media:

Article URL:

https://newviva.in/blog/seed-microbiome-tamil

More from science-deep-dives